Thursday 31 December 2015

Yenna Machi New Year Plannu- என்ன மச்சி நியூ இயர் பிளான்

வணக்கம், 2015ல்  சினி கிறுக்கனாக எழுதி வந்த நான், அப்போ அப்போ FBல் சமூக கிறுக்கனாக மாறி சில பதிவுகள் எழுதினேன், 2016ல் ஒரு புதிய பரிமானம் இந்த சமூக கிறுக்கன் , நான் பார்க்கிற சில விஷயங்கள் ஏன் எதற்குன்னு தெரியமா செய்கிற சில விஷயங்கள், மற்றும் என்னோட கற்பனைகளின் பதிவுகள் தான் இந்த சமூக கிறுக்கன் ப்ளாக்.

சரி வாங்க இந்த சமூக கிறுக்கனின் முதல் பதிவு என்ன என்று பார்க்கலாம், whats appல் 2015 ஒரு பார்வை வந்துச்சு, அதாவுது most used words , most trolled இன் FB, question of the year " Why Kattappa Killed Bhaubali ", most irritating question of the  year அப்படி இப்படின்னு நிறைய வந்துச்சு அனால் எனக்கு எப்பொழுதும் most irritating question of  every year is "என்ன மச்சி நியூ இயர் பிளான் "

வருஷா வருஷம் 25டிசம்பர்க்கு அப்புறம் எல்லோரோடைய வாயில் வரும் ஒரு விஷயம் என்ன மச்சி நியூ இயர் ப்ளான்? இதை ஆண்கள் பெண்கள் எல்லோரும் பயன்படுத்துகிற ஒரு வார்த்தை நியூ இயர் பிளான் என்ன? டேய் அப்படி என்ன தான் டா பிளான் பண்ணுவாங்க? சரி வாங்க பார்க்கலாம்

பெருசா ஒன்னும் பண்ண மாட்டங்க 2 wheeler எடுத்துகிட்டு மெரினா பீச், பெசன்ட் நகர் பீச் போயிட்டு.. 12 மணி ஆனதும் ஓ ஊ ஓ ஊ ஓ ஊ  ன்னு ஊளையிட்டு கத்தி கிட்டு தெரிஞ்சவ தெரியாதவ குறிப்பா பெண்கள் கிட்ட எல்லாம் ஹாப்பி நியூ இயர்ன்னு சொல்லிக்கிட்டு, தறிகெட்ட தனமா போதையில அல்லது போதை இல்லாமல் அதே போல் நிதானம் இல்லாமல் என்னமோ இந்த உலகமே பிறந்தது இவனுக்காக தான் போல வண்டிய பீச் ரோடு முழுசா ஓட்டுவது, பெசன்ட் நகர் , ECR வரைக்கும் ஏன் எதற்கு எங்க போறோம்ன்னு தெரியாம போயிட்டு, முடிஞ்ச அன்னிக்கு போலீஸ்காரங்களை எல்லாம் கலாயிச்சிட்டு, அன்றைக்கு தான் தன்னோட தனி மனித சுதந்திரம் பயன்படுத்துவாங்க இந்த மக்கள். இது இல்லன காசு இருக்கவன் பெரிய பெரிய ஹோட்டல், resortல் போயிட்டு தண்ணி அடிச்சிட்டு ஆடி பாடிகிட்டு இருப்பாங்க இவளோ தான் இவங்க ப்ளான் கேட்டா சந்தோஷத்தை வெளிபடுதுற வருஷத்தில ஒரு நாள்ன்னு ஒரு வியாக்கியானம் பேசுவாங்க.

வருஷா வருஷம் புத்தாண்டு அன்றைக்கு சாலை விபத்துகள் அதிகம் ஆகிட்டு இருக்குனு சொல்லுறாங்க மேலும் கடல்ல குளிக்க தடை சொன்னாலும் அன்றைக்கு மட்டும் கடலில் மூழ்கி இறக்கிறவங்க எண்ணிக்கை வருஷா வருஷம் இருக்கு( இது விகடனில் படித்த ஒரு விஷயம்)

அப்புறம் சமிபகாலமா social networkல்  ஒரு trend இருக்கு, அது என்னன்னா ? தீபாவளி வந்தா போதும் உடனே ஒரு status போடுவாங்க, அதாவுது பாட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடனும் ஏன்னா  noise pollution, environment pollution, road எல்லாம் குப்பை ஆகுது, வீட்டுல நாய்க்கு கஷ்டம் பூனைக்கு கஷ்டம், வெடி இல்லா தீபாவளி கொண்டாடுங்கள் சொல்லுவாங்க,ஏன்டா அந்த பட்டாசு வாங்குறதுல நம்ம சிவகாசில  பாட்டாசு செய்கிற ஒரு குடும்பத்துக்கு ஒரு சின்ன அளவு வருமானம் போகும்ன்னு ஏன்டா உங்களுக்கு தோனல?ஆனா நியூ இயர்ல வாங்குற ஒரு குடி யாருக்குடா வருமானம் போகுது?

பாரம்பரியமா நடந்து வந்த ஜல்லிக்கட்டில் மாடுகளை கொடுமை படுத்துறாங்க, அந்த விளையாட்டு நடக்கும் போது மனித உயிர்கள் போகுது பல விபத்துகள் நடக்குது அதனால அதை தடை செய்பவர்கள் கவனத்திற்கு இந்த new year celebrationல் விபத்து நடக்குது, உயிர் பலி நடக்குது அதுக்காக இதை தடை செய்வார்களா? செய்யமாட்டாங்க ஏன்னா இதுக்கு பின்னாடி
நடக்கிற வியாபாரம் அதன் மூலம் வரும் வருமானம், ஹோட்டல் , resort எல்லோருக்கும் வருமானம், அரசாங்கம் உட்பட , நான் சொல்லுவது வரி மூலமாக வரும் வருமானம் தான். வேற எதுவும் சொல்லவில்லை.

இப்படிக்கு
சமூக கிறுக்கன்