Wednesday 3 February 2016

Thuu... - த்தூ ..

தமிழ் நாட்டுல சமிபகாலத்தில ரெண்டு வார்த்தை பிரபலம் ஒன்று பீப் , இன்னொன்று த்தூ ..
இந்த த்தூ இப்போ கேப்டன் சொன்னதால  பிரபலம் இல்ல , பல காலமா நம்ம நாட்டுல இருப்பது தான்,வேற எதுவும் இல்லைங்க நாம் அன்றாடும் பொது இடத்தில துப்புவது தான்.

ஆமாங்க நம்ம ஊரில் நிறைய துப்புஅறியும் சாம்பு இருக்காங்க .அதாவுது கற்பனை கதாபாத்திரம் detective சாம்பு இல்லைங்க , இவங்க வாயில் கண்டதையும் போட்டு கொதப்பி  எங்க துப்புவதுன்னு தெரியாம சாலையில் துப்பும் துப்புகெட்ட பசங்க இவனுங்க.

அட அரசாங்கம் குட்கா, மாவா, பான்பராக்  மாதிரி பொருட்களை 2013ல் இருந்து தடை செய்யப்பட்டு இருந்தாலும் இன்னும் நிறைய பேர் அதை பயன்படுத்துபவர்கள் இருக்காங்க, அந்த நாசமா போகிற பொருட்டுகளை  அவனுங்க எப்படியாவாது சாப்பிட்டு, உடலை கெடுத்துகிட்டு  போகட்டும் அது அவன் அவன் இஷ்டம், ஏன்னா அது அவன் அவன் தனிப்பட்ட உரிமை, சொன்னாலும் எவனும் கேட்க்கமாட்டங்க ,ஏன்னா புகையிலை உடல்நலத்திற்கு கேடுன்னு அட்டையில் போடுவது அதை தயாரிக்கிற கம்பெனியோட கடமை , அதுல எது போட்டு இருந்தாலும் சரி அதை வாங்கி வாயில் போடுவது நம்ம பசங்களின் உரிமைன்னு  இருக்காங்க .
அப்படி அதை பயன்படுத்தும்  உங்களுக்கு எல்லாம் ஒன்னு சொல்லிக்கிறேன் வாயில் போடுற வரைக்கும் தான் அது உங்க தனிப்பட்ட உரிமை ஆனா அதை ரோட்டுல துப்புவது உங்க உரிமை இல்ல.

துப்பு....
உங்க வீட்டுல துப்பு , ..
நீ ஆட்டோ ஓட்டும் போது உன்னோட ஆட்டோகுள்ள துப்பு ,..
கார் ஓட்டினா உன்னோட கார்ல துப்பிக்கோ ,
என்ன ​​​​​​​ ___________  ரோட்டுல துப்புர? அதுவும் வண்டி ஓட்டும் போதே எதுக்குடா துப்பூரிங்க, சமிபகாலமா இது ரொம்ப அதிகமா இருக்கு,  2 வீலர் ஓட்டுறவங்க அவனுக்கு பின்னாடி உட்க்கார்ந்து இருப்பவங்க, helmet போட்டவங்க கூட அதை துக்கிட்டு வண்டி ஓட்டும் போதே நடுரோட்டிலே துப்புராங்க, பின்னாடி எவன் வரான் எப்படி வரான் பார்கிறதே கிடையாது...

முன்னாடியெல்லாம் நடந்து போய்கிட்டு இருக்கும் போது, எப்போ எவன் வண்டியை நடுப்புல விடுவான் பார்த்து போகவேண்டியது இருக்கும் ஆனா இப்போ எவன் எப்போ எப்படி நடுப்புல திடீர்ன்னு துப்புவான் தெரியல,அதை வேற பார்த்து போக வேண்டிருக்கு,துப்பரது துப்புரிங்க கொஞ்சம் ஓரமா துப்பலாம்ல.ஏன்டா பொது இடத்தில துப்புறது தப்பு அதுல என்னடா வியாக்கியானம்?நியாயம் எல்லாம் சொல்லுறேன்னு  கேட்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது, அதாவது நம்மக்கு முன்னாடி போகிறவன் துப்புறது நம்ம மேல படவில்லை என்றாலும், அந்த ஒரு அடி ரெண்டு அடி கேப்ல அவன் பின்னாடி வரும் போது,அப்படா  நல்லவேளை நம்ம மேல படலை என்றும், ச்சீங்கிற ஒரு அறுவிறுப்பும் தோனுதுல, அதுக்கு தான் அப்படி சொன்னேன்.

இதுல ரொம்ப கொடுமையான விஷயம் என்னன்னா, இந்த பான்பராக் போட்டு துப்புபவனை விட வெறும் எச்சியை துபுரவங்க நிறைய பேரு இருக்காங்க,ஏன் சும்மான்னா  வெறும் எச்சியை ரோட்ல துப்புராங்கன்னு தெரியல, இவனுங்க வீட்டுக்குள்ளையும்  இப்படி தான் சும்மான்னா துப்பிப்பானுகளா தெரியல, அவங்களுக்கு எதாவது சைக்கலாஜிக்கல் பிரச்சனை இருக்கான்னு தெரியல,ஏன் இப்படி சொல்லுறேனா கடந்த டிசம்பர்-2015 மழைல மெயின் ரோட்ல வெள்ளமா தண்ணி ஓடுது அதுல நடந்து போகும் போது துப்புரானுங்க இவனுங்க !!,  ஏன்டா நீ துப்புரியே அந்த துப்புர  எச்சி அளவுக்காவுது உன்னோட தலையில அறிவு இருக்கா? உனக்கு பின்னாடி நிறைய பேரு நடந்து வந்துகிட்டு இருக்காங்களே ,அப்படி மழை தண்ணில துப்பினா பல வியாதி வருமே, அப்படின்னு எதுவுமே தோணலையா?

கண்ட இடத்தில துப்பிவிட்டு  பின்னாடி  வெறும் காலில் மாலை போட்டு வரும் சாமியார்க்கு, பூசாரிகளுக்கும்  பாதபூஜை செய்வது ஏன்? இதற்க்கு பெயர் தான் செய்த பாவத்தை கழுவதா ?

மச்சி எங்கயோ எவனோ இவன் மேல துப்பி இருப்பான் போல என்னமா கூவுரான் பார்ன்னு சொல்லுகிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது, இல்லைங்க யாரும் என்மேல துப்புல,சமிபகாலமா இந்த மாதிரி துப்புறது ரோட்ல நிறைய நடக்குது அது பார்க்கும் போது நம்மக்கு  கடுப்பா இருக்கு, இதை நம்ம எல்லோரும் தினசரி பார்க்கிறது தான், ஏன் அதை இங்கு பதிவு செய்யகூடாதுன்னு தோணிச்சி முடிஞ்சா இதை ஷேர் பண்ணுங்க.இதை படிச்சிட்டு கொஞ்சம் துப்புரது குறைத்தால் சந்தோசம் தான்.ஏன்னா நம்ம மக்கள் அபராதம் எல்லாம் போட்டா  கூட கேட்க மாட்டாங்க, அவங்களா தோனுச்சினா தான் மாறுவாங்க, அப்படி இந்த பதிவு மாற்றம் கொண்டு வந்தா சந்தோஷம் தான்.

இப்படிக்கு
சமூககிறுக்கன்


1 comment:

  1. சூப்பர்!!! எனக்கு மட்டுமல்ல, பலர் மனதில் இருந்த எரிச்சலை காரித் த்த்தூ ன்னு துப்பிடீங்க ...சபாஷ் !!!👍

    ReplyDelete