Wednesday 15 June 2016

பெற்றோரே பெற்றோரே கட்டுமர பெற்றோரே

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது நமக்கு நல்ல தெரிஞ்ச விஷயம் , இது மக்களுக்கு மட்டும் இல்ல இந்த அரசாங்கத்துக்கும் தான்.

2004 கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு அப்புறம் தான் ,அரசாங்கத்துக்கும், பெற்றோருக்கும் சூடு வைத்தது  போல் இருந்தது , அந்த மாதிரி பள்ளிகளுக்கு நடவடிக்கை எடுத்து வந்தது அரசாங்கம்.

2012ல் தாம்பரத்தில்  ஜியோன் பள்ளி வாகனத்தில் இருந்த ஓட்டையால் கீழே விழுந்து , விபத்துல ஒரு 6 வயசு சின்ன பொண்ணு இறந்து போச்சி , அதை மையமாக கொண்டு strawberryன்னு ஒரு படம் கூட வந்தாச்சி , அந்த சம்பவம் நடந்த பிறகு தான், வருஷா வருஷம் பள்ளி வாகனத்தை  RTO சோதனை பண்ண ஆரம்பிச்சாங்க ,பள்ளி  வாகனத்துக்கு மஞ்சள் நிறம் அடிக்கணும் , வேகத்தடை கருவி பொருத்தனம் ,தீயணைப்பு சாதனங்கள்  இருக்கணும் ,மேலும் சில சட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்துச்சி , இது பள்ளி வாகனகளுக்கு மட்டும் இல்ல , கல்லுரி வாகனளுக்கும் பொருந்தும் ,ஆனால் இது எந்த அளவுக்கு நடைமுறையில் உள்ளது ? ஆம் உள்ளது ...
 பள்ளி திறக்கும் ஒரு சில நாட்களுக்கு முன்பு செய்திகளில் ,RTO பள்ளி வாகனங்களை  சோதனை செய்தது , தகுதியற்ற பள்ளி வாகனளுக்கு அங்கீகாரம் ரத்துன்னு செய்திகளில் சொல்லுவாங்க.
ஆனால் அந்த மாதிரி மஞ்சள் நிறம் கொண்ட பள்ளி வாகனங்கள் , எந்த அளவுக்கு சாலையில்  பார்க்கிறோம்? எத்தனை  பள்ளிகள் அரசாங்கம் சொன்னா மாதிரி வாகனங்கள் வச்சி இருக்குன்னு  தெரியுமா?உண்மை நிலவரம் என்ன தெரியுமா ?

ஆம் தெரியும் , அந்த பள்ளிகளுக்கு தெரியும், அந்த வாகனகளை இயக்குகிற travelsநிர்வாகத்துக்கு தெரியும் , ஏன் அதில் பிள்ளைகளை அனுப்பும் மரமண்டை பெற்றோர்க்கு தெரியும் , இதோ அந்த பள்ளி வாகனம் ,




 இவை தான் இன்றைய உண்மையின் முகம் , இதோ இந்த மாதிரி பள்ளி வாகனத்தில் தான் இன்றைய பெற்றோர் அனுப்புகிறார்கள்,

இந்த மகேந்திரா வேன்களிலும் ஆம்னி கார்களிலும்  செல்லும் பசங்களுக்கு எந்த அளவுக்கு பாதுக்காப்பு இருக்கிறது என்பதை இந்த பெற்றோர்கள் யோசிச்சி இருக்காங்களா ? அல்லது இந்த அரசாங்கத்திற்கு  எந்த அளவுக்கு தெரியும் ? ஏன் இந்த வாகனங்கள் சாலையில் செல்லும் போது இதை போக்குவரத்து காவல் கண்களில் படுவதில்லையா?  அல்லது RTO காதுகளில் கேட்பதில்லையா ? ஏன் இந்த வேன்கள் சைலென்ட் modeல்   செல்லுகிறதா ? அல்லது invisible modeல் செல்லுகிறதா ? நேரத்திற்கு பள்ளிக்கு போக வேண்டும்ன்னு  இந்த வகை வாகனங்கள் காலையில் சைரைய்ன் வைக்காத ஆம்புலன்ஸ்களாக தெருக்களில் பறக்கிறது , இதன் வேகத்தையும் பாதுகாப்பையும் அறிவது யாரோ ? மேலும் இந்த வாகனங்களில் டிரைவர் இருக்கையின் அருகேயே மூன்று அல்லது நான்கு மாணவர்கள் உட்கார்ந்து செல்லுகிறார்கள் அவர்களின் பாதுகாப்பினை அறிவது யாரோ ?

இந்த வாகனங்களை பற்றி கேட்டால் , பள்ளிக்கும் அந்த travelsக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லுவாங்க ஆனால் , அந்த பள்ளிகளுக்கு முன்னாடி வரிசயாய் நிற்கும், இதை சென்னையில் பல பிரபல பள்ளிகளின் வளாகத்தின் அருகே பார்க்கலாம், மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாலும் , நேரம் மாற்றம் செய்தாலும் இந்த வேன் டிரைவர்களுக்கு தெரியும் ஆனா கேட்டால் அந்த பள்ளிகளுக்கும் அந்த வேன்களுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லுவாங்க.

பல பிரபல பள்ளிகளுக்கு பள்ளி வாகனங்களே கிடையாது, அரசாங்கம் கூறுவது   போல் சில பள்ளிகளில் அந்த மஞ்சள் நிற  வாகனங்கள் இருந்தாலும் அவைகள் பெற்றோர்களுக்கு கட்டுபடி ஆகாத கட்டணத்தில் உள்ளதால் பெற்றோர்கள்  தம் பிள்ளைகளின் பாதுகாபின்னை மறந்து இத்தகைய தனியார் வாகனங்களை நாடி செல்லுகிறார்கள், எனவே அரசாங்கம்  மாணவர்களின்  பாதுகாப்பிற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில் கீழே உள்ள வரிகள் தான் பெற்றோர்களுக்கு பொருந்தும்

பெற்றோரே பெற்றோரே  உங்களை  கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாக மிதக்க மாட்டீங்க ,மரமண்டையாய் தான் இருப்பீங்க ..மீண்டும் ஒரு முறை ஜியோன் பள்ளி சம்பவம் போல் நடக்கும் வரை.

இப்படிக்கு 
சமூக கிறுக்கன் 

#samoogakirukkan 


No comments:

Post a Comment