Sunday 31 December 2017

டிசம்பர் 31 ஒரு பயணம்

பொதுவா வாராவாரம் ஒரு படத்தை பார்த்துட்டு விமர்சனம் எழுதிடுவேன், ஆனால் இந்த வாரம் பல படங்கள் வந்தாலும் ,  சில பல வேலைகளால் எந்த படமும் பார்க்க முடியல , சரி எதையாவுது எழுதுவோம்ன்னு இந்த சமூக கிறுக்கனுக்கு வந்து எழுதலாம்ன்னு தோணுச்சி.

வருஷா வருஷம் ஒரு புது வருஷம் வருது , எல்லோரும் சொல்லுவது போல இந்த வருஷமும் காலண்டர் தேதி தவிர நாம ஒன்னும் உருப்படியா கிழிக்கல, ஆனா இந்த டிசம்பர் 31ம் தேதி  நடக்கும் விஷயங்கள் ஒரு பயணமாக எழுதலாம்ன்னு ஒரு ஐடியா(மூக்கு புடைப்பா இருந்தா யோசிக்க தோணும்) .

நாம வீட்டுல இருந்தா டிவி தவிர ஒன்னும் பார்க்க மாட்டோம் , சரி டிவி போட்டா , இந்திய இந்த வருஷம் , உலகம் இந்த வருஷம் , இந்த வருஷம் சிறந்த படங்கள் , புது வருஷம் ராசிபலன்கள்ன்னு, தனியார் சேனல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்னைக்கு வரைக்கும் எத்தனை சேனல் வந்தாலும் மாறாத இந்த நிகழ்ச்சிகள் , மக்கள் பார்க்குறாங்களா இல்லையான்னு  கவலைப்படாமல் போட்டுக்கிட்டு இருக்காங்க.

அட இந்த டிவி தொல்லை தாங்கல ஆப் பண்ணிட்டு , நாம வழக்கம் போல நம்ம கையில இருக்குற மொபைல் நோண்டுவோம் பார்த்தா, ஜியோகாரன் தினமும் 1gb  free data கொடுத்தாலும், நம்ம பசங்க 4gbக்கு ஒரே forward wishesகளும்  , imagesகளையும்  இருக்குற எல்லா குரூப்களிலும்  அனுப்பி நம்மை torture பண்ணுவாங்க, இது எதுவும் சம்மந்தம் இல்லாம இந்த மொபைல் providersகாரங்க  இன்னைக்கு SMS அனுப்பினா  free கிடையாது  sms சார்ஜ் பண்ணுவோம்ன்னு ஒரு மெசேஜ் அனுப்புவாங்க, யாரும் இல்லாத கடைக்கு யாருக்கு டா  டீ ஆத்துறீங்கன்னு கேட்க தோணும்

 ச்சே இந்த பிரச்சன்னை எல்லாம் வேண்டாம் டா, வெளியே ஒரு நட நடந்து என்ன நடக்குதுன்னு  பார்க்கலாம்  பார்த்தா , அப்போ தான் ஒருத்தன் வந்து, அப்புறம் மச்சி நியூ இயர் பிளான் என்னன்னு கேட்பான், டிசம்பர் 29ம் தேதியிலிருந்து இந்த கேள்வி கேக்க ஆரம்பிச்சிடுவானுக, அதுவும் 31ம் தேதி சரக்கு அடிச்சி மட்டை ஆகுபவனலிருந்து, தயிர் சோறு சாப்பிட்டு மட்டை ஆகுபவன் வரை இந்த கேள்வி கேட்ப்பானுங்க , எதுக்கு யார்கிட்ட கேக்கணும் ஒரு விவஸ்தை இல்லாமல் பாரபட்சம் இல்லாமல் கேட்ப்பாங்க.

அப்படியே ரோட்ல போனா , புதுசு புதுசா one way , no way  இருக்கும் , மேலும் தீடிர்ன்னு முளைத்து இருக்கும் barricadeகளுடன்  எவன்  எந்த  வண்டில போதையில வந்து மோதி என்ன ஏழரைய கூட்டுவனோன்னு யோசினையில பாதுகாப்பில் இருக்கும் போலீஸ்காரர்கள்,முகம் தெரியாதவனுக்கு அவசரத்துக்கு உதவாதவன் கூட அன்னிக்கு இரவு முழுவதும் ,முகம் தெரியாதவனுக்கு ஹாப்பி நியூ இயர்ன்னு சொல்லிட்டு போவானுங்க.


இவனுக தொல்லை தாங்கல திரும்பவும் வீட்டுக்கு போகலாம் பார்த்தா, போற வழில நம்ம தெரு பசங்க ஸ்டார் கட்டிக்கிட்டு, பாட்டு போட்டுக்கிட்டு , கையில கேக் ரெடியா வச்சிக்கிட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்ன்னு , ஊ ஊ ன்னு ஊளை விட்டுகிட்டு ,ஏதோ 15ஆக்ஸ்ட்1947 ராத்திரி சுதந்திரத்துக்கு காத்துகிட்டு இருக்கிறா மாதிரி இருப்பாங்க.

இதை எல்லாம் தாண்டி நம்ம வீட்டு வாசலுக்கு போனா!, நம்ம வீட்டுல இருக்கும் பெண்கள் அஞ்சறை பெட்டியோடு வெளியே நிப்பாங்க, என்னடான்னு எதாவுது சமைக்க போறாங்களான்னு பார்த்தா, அது சமையல் அஞ்சறை பெட்டி இல்ல, கோலம் போடுறதுக்கு கலர் வச்சி இருக்கும் பெட்டி, இது பரவாயில்லை சில பேரு வீட்டுல கொட்டாங்குச்சில கொட்டி வச்சியிருப்பாங்க,மார்கழில கோலம் போடுவது நம்ம கலாச்சாரம் , ஆனா இந்த நியூ இயர்க்கு ஸ்பெஷல் ஆகா கலர் போட்டு கோலம் போடுவது என்பது சமீப வருஷங்களில் எழுதப்படாத புது கலாச்சாரம் என்று ஆகிடுச்சு .

ஒரு பக்கம் பசங்களோட ஆட்டம் பாட்டம் , மறுப்பக்கம் பெண்கள் தெருக்களில்  கோலப்போட்டி, இப்படின்னு உங்க கொண்டாட்டத்தின் நடுவே எங்க தூக்கத்தை ஏன்டா கலைச்சிங்கன்னு கேட்க்காமல் கேட்க்கும் நாய்களின் கூட்டம் மறுப்பக்கம்.

இப்படி இந்த பயணத்தை முடிச்சிட்டு வீட்டுக்கு போனா, 12மணிக்கு சன் மியூசிக் ல  சகலகலா வல்லவன் கமல் ஹாப்பி நியூ இயர் சொல்லுவதை கேட்டுட்டு , கண்ணை மூட்டிட்டு தூங்குவது தான் மிச்சம் .காலையில முழிச்சி வாசலை பார்த்தா Happy New Year ன்னு போட்டு ஒரு கோலம் இருக்கும்.

 சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டு இல்லை என்று சொல்லும் கட்சிக்கு தெரியாத ? ,நம் வீட்டு வாசலில் கோலம் வடிவில் Happy New Year என்கிற ஆங்கிலம் நுழைந்துவிட்டது என்று .


குறிப்பு : இந்த பதிவு எந்த கலாச்சாரத்திற்கும் எதிரானது அல்ல , இவன் என்ன ஒழுங்கா, இவன் எந்த ஆட்டம் போடுவது இல்லையா என்று கேட்க்கும் உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு தெரியும் .

இப்படிக்கு 
சமூக கிறுக்கன் 

Tuesday 15 August 2017

Madras to Chennai - மதராஸ் முதல் சென்னை வரை

சினி கிறுக்கன் பேருல நம்ம பொதுவா சினிமா விமர்சனம் தானே பண்ணுவோம் ? ஆமா இந்த பதிவு எதுக்கு ? 

எனக்கு இன்னொரு பேரு இருக்கு. அது 
சமூக கிறுக்கன் ,

சினிமா பற்றி எழுதினா பல பேரு பாக்கிறாங்க ஆனா சமூகத்தை பற்றி எழுதினா எவனும் மதிக்கல , இருந்தாலும் இப்போ மதராஸ் தினம் வருது(22Aug) , நாம தான் சென்னைவாசி ஆச்சே , சென்னை பற்றி எழுதலன்னா  நல்லா இருக்காதே தோணுச்சு, அதான் இந்த பதிவு 

முதலில் மெட்ராஸ் தமிழ்நாடு ஆகியது , மெட்ராஸ் தமிழ்நாட்டின் தலைநகரம் ஆகியது , 1996ல் தலைநகரம் மெட்ராஸ் சென்னையாகியது 

சென்னைங்கிற கிராமத்தை ஒரு வெளிநாட்டுகாரர் வாங்கினாராம்  அந்த தினம் தான் மெட்ராஸ் தினம்ன்னு  சொல்லுறாங்க , அதாவது மெட்ராஸ் டேன்னு  கொண்டாடுறாங்கப்பா  , அட யாருப்பா இந்த மதராஸ் டே கொண்டாட ஐடியா கொடுத்தது ? நம்ம வின்ஸ்டன் டி சோசா , நம்மில் பல பேருக்கு  வின்ஸ்டன் சர்ச்சிலே தெரியாது இதுல வின்ஸ்டன் டி சோசாவா ? சரி அவரை பற்றி பேசுறது விடுங்க , மதராஸ் டே கொண்டாவதுக்கு முன்னாடி நம்ம சென்னை பற்றி பார்ப்போம் , ஏதோ என்னோட அனுபவத்தில்.

எந்த இலக்கியத்துக்கும் அப்பாற்பட்டது நம்ம சென்னை தமிழ் ,  பலர் கேவலமாக பார்க்கிறாங்க , ஆனால் அது ஒரு பாமரனின் அடையாளம் என்பதை மறந்து விடாதீங்க , ஹிந்தி தெரியலானாலும் , ஹிந்திகாரங்க கிட்ட ஹிந்தி இங்கிலிஷ் தமிழ் சேர்த்து சமாளிக்கற நம்ம ஆட்டோகாரங்க கெத்துதாங்க . அந்த சென்னை தமிழில், சென்னையில்  பிறந்தது தான்  கானா பாடல்.

என்னதான் சென்னை டிராபிக் திட்டின்னாலும், peak hour ல Omr ல் service ரோட்டுல பூந்து பூந்து வண்டி ஓட்டுவது ஒரு சந்தோசம் தாங்க, ஆண் பெண் பேதம் மறந்து , ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து , எல்லோரையும் சரிசமமாக  பார்த்தது நம்ம சென்னை ஷேர் ஆட்டோவும் , AC பஸ்ஸும் தாங்க

சென்னை டிராபிக் குறைக்க வந்த ஒரு புதுவரவு இந்த மெட்ரோ ரயில் , ஆனா அது நல்ல மாதவரவு உள்ளவனுக்கே ஒரு வரம், மற்றவனுக்கு அது வெறும் கான்க்ரீட்டால் கட்டிய மரம் .

என்னதான் சத்யம் தியேட்டர் போனாலும் , பல ஜோடிகளுக்கு புகலிடம் சங்கம் தியேட்டர் couple seat தாங்க , எவ்ளோதான் renovate பண்ணி புது படம் போட்டாலும் ஜோதி தியேட்டர்ன்னு  சொன்ன ஒரு நக்கல் சிரிப்பு எல்லோருக்கும் வர தான் செய்யும் ,அதே நேரத்தில் வெளியூரிலிருந்து flight ல வந்தாலும் சரி பஸ்ல வந்தாலும் சரி, எல்லோரோயும் முதலில் வரவேற்பது அந்த ஜோதி தியேட்டர் தாங்க .

நம்ம பாக்கெட் காலி ஆனாலும் செலவு இல்லாம போற இடம் நம்ம பீச் தாங்க ,ஆனால் இப்போ அந்த நிம்மதியையும் இந்த அரசாங்கம் காலி பண்ணிடுச்சி 

என்னதான்  இப்போ ஆன்லைனில் வாங்கினாலும் திநகர் platform கடையில் பேரம் பேசி வாங்கறது ஒரு சுகம் தாங்க , KFC ,MCD ல சாப்பிட்டாலும் திநகர் purchase முடிச்சி, ரங்கநாதன் தெரு முனையில் கரும்பு ஜூஸ்ம் , கோன் ஐஸ்கிரீம் சாப்பிடறது தாங்க நம்ம சென்னை மக்கள் .

நெல்லை அல்வா , மணப்பாறை முறுக்கு , கோவில்பட்டி கடலைமிட்டாய் , ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவான்னு எல்லோருக்கும் தெரியும்  , சென்னைன்னா வடகறின்னு எத்தன்னை  பேருக்கு தெரியும் ? சென்னைக்காரங்க கண்டுபிடுப்பு இந்த வடகறிங்க ,பெரியவங்க சும்மாவா சொன்னாங்க,  
" ஜவாலக்கடி கிரி கிரி சைதாப்பேட்டை வடக்கறின்னு " அதுமட்டுமா அத்தோ , பைஜோன்னு பர்மா ஐட்டம் கிடைக்கிறது நம்ம சென்னை தாங்க . தெருக்கு தெரு விற்கும் கையேந்தி பவன் இட்லியும் சரி , ராத்திரியில் விற்கும் பிரியாணியும் சரி,  பல வெளியூர்கார பிரம்மச்சாரிகளுக்கு வரப்பிரசாதம்ங்க 

நேற்று பெய்ஞ்ச மழையில் முளைத்த காளானை நிறைய லேடிஸ் ஹாஸ்டல் , பணம் கட்டி பாதுகாப்பாக இருந்தாலும் , அங்கே  தரும் சாப்பாடு வயித்துக்கு பாதுக்காப்பாக இருக்காது.


சென்னையில் என்னைக்கும் மாறாத ஒரு விஷயம்ன்னா  அது  தண்ணி பிரச்சன்னை , மழை பெய்ஞ்சி அதிகமா வந்தாலும் பிரச்சன்னை , இப்போ மழை பெய்யாம குடம் குடமா , தெரு தெருவா சுத்துறதும் ஒரு பிரச்சன்னை தான் ,  காலை 12 மணிக்கு முன்னாடியும் , ராத்திரி 10 மணிக்கும் அப்புறம் பல குடிமகன்களுக்கு தண்ணி ஒரு பிரச்சன்னை தான் .

சென்னையில் என்றைக்கோ மாறியது , இன்றும் மாறாதது கூவம்தாங்க , அழகான நதி , அழகான கிராமம் கூவத்தில் இருந்து ஊற்று எடுத்து வந்த அழகான சொல் இன்று இழிவான சொல்லாக மாறியது , தமிழ் நாட்டில் பல ஆட்சிகள் மாறினாலும் , மாறாத நாம் செய்த ஒரு பாவ செயல் இந்த கூவம்.

என்னதான் சென்னை கூட்ட நெரிசல் , டிராபிக் சொன்னாலும் , விசேஷ நாட்களில் அவங்க அவங்க சொந்த ஊருக்கு போன பிறகு, கூட்டம் இல்லாத திநகர் , புரசைவாக்கமும் , டிராபிக் இல்லா அண்ணா சாலை ,OMR  பார்க்க கஷ்டமா தான் இருக்கு , வந்தாரை வாழவைக்கும் சென்னை ,அதனால  இங்கே வெளியூரிலிந்து வந்தோர் அனைவரும் , சென்னையை திட்டினோம்ன்னு இல்லாமல் , உங்க புகுந்த வீடா நினைத்து வாழுங்க.

மயிலாப்பூர் காபி தூள் வாசனை 
சௌகார்பேட்டையின் ஸ்வீட் வாசனை, 
காசிமேடு மீன் வாசனை , 
மூலகோத்திரம்  கருவாட்டு வாசனை  , 
எந்த வாசனையாக இருந்தாலும் சரி , பல வாசனைகள் கலந்தது தான் இந்த சென்னைவாசிகள் .

குறிப்பு : சென்னை கடலும் கடல் சார்ந்த இடம் அதனால இலக்கியத்தில நெய்தல்ன்னு  சொல்லுவாங்க, 

மேலும் ஒரு குறிப்பு இந்த பதிவு என்னோட  அனுபவத்திலும் , சில கேள்விப்பட்ட விஷயங்களிருந்தும் எழுதியவை , ஏதாவது தப்பா இருந்த சொல்லுங்க மாத்திடலாம் .

இப்படிக்கு 
சமூக கிறுக்கன் .