சினி கிறுக்கன் பேருல நம்ம பொதுவா சினிமா விமர்சனம் தானே பண்ணுவோம் ? ஆமா இந்த பதிவு எதுக்கு ?
எனக்கு இன்னொரு பேரு இருக்கு. அது
சமூக கிறுக்கன் ,
சினிமா பற்றி எழுதினா பல பேரு பாக்கிறாங்க ஆனா சமூகத்தை பற்றி எழுதினா எவனும் மதிக்கல , இருந்தாலும் இப்போ மதராஸ் தினம் வருது(22Aug) , நாம தான் சென்னைவாசி ஆச்சே , சென்னை பற்றி எழுதலன்னா நல்லா இருக்காதே தோணுச்சு, அதான் இந்த பதிவு
முதலில் மெட்ராஸ் தமிழ்நாடு ஆகியது , மெட்ராஸ் தமிழ்நாட்டின் தலைநகரம் ஆகியது , 1996ல் தலைநகரம் மெட்ராஸ் சென்னையாகியது
சென்னைங்கிற கிராமத்தை ஒரு வெளிநாட்டுகாரர் வாங்கினாராம் அந்த தினம் தான் மெட்ராஸ் தினம்ன்னு சொல்லுறாங்க , அதாவது மெட்ராஸ் டேன்னு கொண்டாடுறாங்கப்பா , அட யாருப்பா இந்த மதராஸ் டே கொண்டாட ஐடியா கொடுத்தது ? நம்ம வின்ஸ்டன் டி சோசா , நம்மில் பல பேருக்கு வின்ஸ்டன் சர்ச்சிலே தெரியாது இதுல வின்ஸ்டன் டி சோசாவா ? சரி அவரை பற்றி பேசுறது விடுங்க , மதராஸ் டே கொண்டாவதுக்கு முன்னாடி நம்ம சென்னை பற்றி பார்ப்போம் , ஏதோ என்னோட அனுபவத்தில்.
எந்த இலக்கியத்துக்கும் அப்பாற்பட்டது நம்ம சென்னை தமிழ் , பலர் கேவலமாக பார்க்கிறாங்க , ஆனால் அது ஒரு பாமரனின் அடையாளம் என்பதை மறந்து விடாதீங்க , ஹிந்தி தெரியலானாலும் , ஹிந்திகாரங்க கிட்ட ஹிந்தி இங்கிலிஷ் தமிழ் சேர்த்து சமாளிக்கற நம்ம ஆட்டோகாரங்க கெத்துதாங்க . அந்த சென்னை தமிழில், சென்னையில் பிறந்தது தான் கானா பாடல்.
என்னதான் சென்னை டிராபிக் திட்டின்னாலும், peak hour ல Omr ல் service ரோட்டுல பூந்து பூந்து வண்டி ஓட்டுவது ஒரு சந்தோசம் தாங்க, ஆண் பெண் பேதம் மறந்து , ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து , எல்லோரையும் சரிசமமாக பார்த்தது நம்ம சென்னை ஷேர் ஆட்டோவும் , AC பஸ்ஸும் தாங்க
சென்னை டிராபிக் குறைக்க வந்த ஒரு புதுவரவு இந்த மெட்ரோ ரயில் , ஆனா அது நல்ல மாதவரவு உள்ளவனுக்கே ஒரு வரம், மற்றவனுக்கு அது வெறும் கான்க்ரீட்டால் கட்டிய மரம் .
என்னதான் சத்யம் தியேட்டர் போனாலும் , பல ஜோடிகளுக்கு புகலிடம் சங்கம் தியேட்டர் couple seat தாங்க , எவ்ளோதான் renovate பண்ணி புது படம் போட்டாலும் ஜோதி தியேட்டர்ன்னு சொன்ன ஒரு நக்கல் சிரிப்பு எல்லோருக்கும் வர தான் செய்யும் ,அதே நேரத்தில் வெளியூரிலிருந்து flight ல வந்தாலும் சரி பஸ்ல வந்தாலும் சரி, எல்லோரோயும் முதலில் வரவேற்பது அந்த ஜோதி தியேட்டர் தாங்க .
நம்ம பாக்கெட் காலி ஆனாலும் செலவு இல்லாம போற இடம் நம்ம பீச் தாங்க ,ஆனால் இப்போ அந்த நிம்மதியையும் இந்த அரசாங்கம் காலி பண்ணிடுச்சி
என்னதான் இப்போ ஆன்லைனில் வாங்கினாலும் திநகர் platform கடையில் பேரம் பேசி வாங்கறது ஒரு சுகம் தாங்க , KFC ,MCD ல சாப்பிட்டாலும் திநகர் purchase முடிச்சி, ரங்கநாதன் தெரு முனையில் கரும்பு ஜூஸ்ம் , கோன் ஐஸ்கிரீம் சாப்பிடறது தாங்க நம்ம சென்னை மக்கள் .
நெல்லை அல்வா , மணப்பாறை முறுக்கு , கோவில்பட்டி கடலைமிட்டாய் , ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவான்னு எல்லோருக்கும் தெரியும் , சென்னைன்னா வடகறின்னு எத்தன்னை பேருக்கு தெரியும் ? சென்னைக்காரங்க கண்டுபிடுப்பு இந்த வடகறிங்க ,பெரியவங்க சும்மாவா சொன்னாங்க,
" ஜவாலக்கடி கிரி கிரி சைதாப்பேட்டை வடக்கறின்னு " அதுமட்டுமா அத்தோ , பைஜோன்னு பர்மா ஐட்டம் கிடைக்கிறது நம்ம சென்னை தாங்க . தெருக்கு தெரு விற்கும் கையேந்தி பவன் இட்லியும் சரி , ராத்திரியில் விற்கும் பிரியாணியும் சரி, பல வெளியூர்கார பிரம்மச்சாரிகளுக்கு வரப்பிரசாதம்ங்க
நேற்று பெய்ஞ்ச மழையில் முளைத்த காளானை நிறைய லேடிஸ் ஹாஸ்டல் , பணம் கட்டி பாதுகாப்பாக இருந்தாலும் , அங்கே தரும் சாப்பாடு வயித்துக்கு பாதுக்காப்பாக இருக்காது.
சென்னையில் என்னைக்கும் மாறாத ஒரு விஷயம்ன்னா அது தண்ணி பிரச்சன்னை , மழை பெய்ஞ்சி அதிகமா வந்தாலும் பிரச்சன்னை , இப்போ மழை பெய்யாம குடம் குடமா , தெரு தெருவா சுத்துறதும் ஒரு பிரச்சன்னை தான் , காலை 12 மணிக்கு முன்னாடியும் , ராத்திரி 10 மணிக்கும் அப்புறம் பல குடிமகன்களுக்கு தண்ணி ஒரு பிரச்சன்னை தான் .
சென்னையில் என்றைக்கோ மாறியது , இன்றும் மாறாதது கூவம்தாங்க , அழகான நதி , அழகான கிராமம் கூவத்தில் இருந்து ஊற்று எடுத்து வந்த அழகான சொல் இன்று இழிவான சொல்லாக மாறியது , தமிழ் நாட்டில் பல ஆட்சிகள் மாறினாலும் , மாறாத நாம் செய்த ஒரு பாவ செயல் இந்த கூவம்.
என்னதான் சென்னை கூட்ட நெரிசல் , டிராபிக் சொன்னாலும் , விசேஷ நாட்களில் அவங்க அவங்க சொந்த ஊருக்கு போன பிறகு, கூட்டம் இல்லாத திநகர் , புரசைவாக்கமும் , டிராபிக் இல்லா அண்ணா சாலை ,OMR பார்க்க கஷ்டமா தான் இருக்கு , வந்தாரை வாழவைக்கும் சென்னை ,அதனால இங்கே வெளியூரிலிந்து வந்தோர் அனைவரும் , சென்னையை திட்டினோம்ன்னு இல்லாமல் , உங்க புகுந்த வீடா நினைத்து வாழுங்க.
மயிலாப்பூர் காபி தூள் வாசனை
சௌகார்பேட்டையின் ஸ்வீட் வாசனை,
காசிமேடு மீன் வாசனை ,
மூலகோத்திரம் கருவாட்டு வாசனை ,
எந்த வாசனையாக இருந்தாலும் சரி , பல வாசனைகள் கலந்தது தான் இந்த சென்னைவாசிகள் .
குறிப்பு : சென்னை கடலும் கடல் சார்ந்த இடம் அதனால இலக்கியத்தில நெய்தல்ன்னு சொல்லுவாங்க,
மேலும் ஒரு குறிப்பு இந்த பதிவு என்னோட அனுபவத்திலும் , சில கேள்விப்பட்ட விஷயங்களிருந்தும் எழுதியவை , ஏதாவது தப்பா இருந்த சொல்லுங்க மாத்திடலாம் .
இப்படிக்கு
சமூக கிறுக்கன் .
எனக்கு இன்னொரு பேரு இருக்கு. அது
சமூக கிறுக்கன் ,
சினிமா பற்றி எழுதினா பல பேரு பாக்கிறாங்க ஆனா சமூகத்தை பற்றி எழுதினா எவனும் மதிக்கல , இருந்தாலும் இப்போ மதராஸ் தினம் வருது(22Aug) , நாம தான் சென்னைவாசி ஆச்சே , சென்னை பற்றி எழுதலன்னா நல்லா இருக்காதே தோணுச்சு, அதான் இந்த பதிவு
முதலில் மெட்ராஸ் தமிழ்நாடு ஆகியது , மெட்ராஸ் தமிழ்நாட்டின் தலைநகரம் ஆகியது , 1996ல் தலைநகரம் மெட்ராஸ் சென்னையாகியது
சென்னைங்கிற கிராமத்தை ஒரு வெளிநாட்டுகாரர் வாங்கினாராம் அந்த தினம் தான் மெட்ராஸ் தினம்ன்னு சொல்லுறாங்க , அதாவது மெட்ராஸ் டேன்னு கொண்டாடுறாங்கப்பா , அட யாருப்பா இந்த மதராஸ் டே கொண்டாட ஐடியா கொடுத்தது ? நம்ம வின்ஸ்டன் டி சோசா , நம்மில் பல பேருக்கு வின்ஸ்டன் சர்ச்சிலே தெரியாது இதுல வின்ஸ்டன் டி சோசாவா ? சரி அவரை பற்றி பேசுறது விடுங்க , மதராஸ் டே கொண்டாவதுக்கு முன்னாடி நம்ம சென்னை பற்றி பார்ப்போம் , ஏதோ என்னோட அனுபவத்தில்.
எந்த இலக்கியத்துக்கும் அப்பாற்பட்டது நம்ம சென்னை தமிழ் , பலர் கேவலமாக பார்க்கிறாங்க , ஆனால் அது ஒரு பாமரனின் அடையாளம் என்பதை மறந்து விடாதீங்க , ஹிந்தி தெரியலானாலும் , ஹிந்திகாரங்க கிட்ட ஹிந்தி இங்கிலிஷ் தமிழ் சேர்த்து சமாளிக்கற நம்ம ஆட்டோகாரங்க கெத்துதாங்க . அந்த சென்னை தமிழில், சென்னையில் பிறந்தது தான் கானா பாடல்.
என்னதான் சென்னை டிராபிக் திட்டின்னாலும், peak hour ல Omr ல் service ரோட்டுல பூந்து பூந்து வண்டி ஓட்டுவது ஒரு சந்தோசம் தாங்க, ஆண் பெண் பேதம் மறந்து , ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து , எல்லோரையும் சரிசமமாக பார்த்தது நம்ம சென்னை ஷேர் ஆட்டோவும் , AC பஸ்ஸும் தாங்க
சென்னை டிராபிக் குறைக்க வந்த ஒரு புதுவரவு இந்த மெட்ரோ ரயில் , ஆனா அது நல்ல மாதவரவு உள்ளவனுக்கே ஒரு வரம், மற்றவனுக்கு அது வெறும் கான்க்ரீட்டால் கட்டிய மரம் .
என்னதான் சத்யம் தியேட்டர் போனாலும் , பல ஜோடிகளுக்கு புகலிடம் சங்கம் தியேட்டர் couple seat தாங்க , எவ்ளோதான் renovate பண்ணி புது படம் போட்டாலும் ஜோதி தியேட்டர்ன்னு சொன்ன ஒரு நக்கல் சிரிப்பு எல்லோருக்கும் வர தான் செய்யும் ,அதே நேரத்தில் வெளியூரிலிருந்து flight ல வந்தாலும் சரி பஸ்ல வந்தாலும் சரி, எல்லோரோயும் முதலில் வரவேற்பது அந்த ஜோதி தியேட்டர் தாங்க .
நம்ம பாக்கெட் காலி ஆனாலும் செலவு இல்லாம போற இடம் நம்ம பீச் தாங்க ,ஆனால் இப்போ அந்த நிம்மதியையும் இந்த அரசாங்கம் காலி பண்ணிடுச்சி
என்னதான் இப்போ ஆன்லைனில் வாங்கினாலும் திநகர் platform கடையில் பேரம் பேசி வாங்கறது ஒரு சுகம் தாங்க , KFC ,MCD ல சாப்பிட்டாலும் திநகர் purchase முடிச்சி, ரங்கநாதன் தெரு முனையில் கரும்பு ஜூஸ்ம் , கோன் ஐஸ்கிரீம் சாப்பிடறது தாங்க நம்ம சென்னை மக்கள் .
நெல்லை அல்வா , மணப்பாறை முறுக்கு , கோவில்பட்டி கடலைமிட்டாய் , ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவான்னு எல்லோருக்கும் தெரியும் , சென்னைன்னா வடகறின்னு எத்தன்னை பேருக்கு தெரியும் ? சென்னைக்காரங்க கண்டுபிடுப்பு இந்த வடகறிங்க ,பெரியவங்க சும்மாவா சொன்னாங்க,
" ஜவாலக்கடி கிரி கிரி சைதாப்பேட்டை வடக்கறின்னு " அதுமட்டுமா அத்தோ , பைஜோன்னு பர்மா ஐட்டம் கிடைக்கிறது நம்ம சென்னை தாங்க . தெருக்கு தெரு விற்கும் கையேந்தி பவன் இட்லியும் சரி , ராத்திரியில் விற்கும் பிரியாணியும் சரி, பல வெளியூர்கார பிரம்மச்சாரிகளுக்கு வரப்பிரசாதம்ங்க
நேற்று பெய்ஞ்ச மழையில் முளைத்த காளானை நிறைய லேடிஸ் ஹாஸ்டல் , பணம் கட்டி பாதுகாப்பாக இருந்தாலும் , அங்கே தரும் சாப்பாடு வயித்துக்கு பாதுக்காப்பாக இருக்காது.
சென்னையில் என்னைக்கும் மாறாத ஒரு விஷயம்ன்னா அது தண்ணி பிரச்சன்னை , மழை பெய்ஞ்சி அதிகமா வந்தாலும் பிரச்சன்னை , இப்போ மழை பெய்யாம குடம் குடமா , தெரு தெருவா சுத்துறதும் ஒரு பிரச்சன்னை தான் , காலை 12 மணிக்கு முன்னாடியும் , ராத்திரி 10 மணிக்கும் அப்புறம் பல குடிமகன்களுக்கு தண்ணி ஒரு பிரச்சன்னை தான் .
சென்னையில் என்றைக்கோ மாறியது , இன்றும் மாறாதது கூவம்தாங்க , அழகான நதி , அழகான கிராமம் கூவத்தில் இருந்து ஊற்று எடுத்து வந்த அழகான சொல் இன்று இழிவான சொல்லாக மாறியது , தமிழ் நாட்டில் பல ஆட்சிகள் மாறினாலும் , மாறாத நாம் செய்த ஒரு பாவ செயல் இந்த கூவம்.
என்னதான் சென்னை கூட்ட நெரிசல் , டிராபிக் சொன்னாலும் , விசேஷ நாட்களில் அவங்க அவங்க சொந்த ஊருக்கு போன பிறகு, கூட்டம் இல்லாத திநகர் , புரசைவாக்கமும் , டிராபிக் இல்லா அண்ணா சாலை ,OMR பார்க்க கஷ்டமா தான் இருக்கு , வந்தாரை வாழவைக்கும் சென்னை ,அதனால இங்கே வெளியூரிலிந்து வந்தோர் அனைவரும் , சென்னையை திட்டினோம்ன்னு இல்லாமல் , உங்க புகுந்த வீடா நினைத்து வாழுங்க.
மயிலாப்பூர் காபி தூள் வாசனை
சௌகார்பேட்டையின் ஸ்வீட் வாசனை,
காசிமேடு மீன் வாசனை ,
மூலகோத்திரம் கருவாட்டு வாசனை ,
எந்த வாசனையாக இருந்தாலும் சரி , பல வாசனைகள் கலந்தது தான் இந்த சென்னைவாசிகள் .
குறிப்பு : சென்னை கடலும் கடல் சார்ந்த இடம் அதனால இலக்கியத்தில நெய்தல்ன்னு சொல்லுவாங்க,
மேலும் ஒரு குறிப்பு இந்த பதிவு என்னோட அனுபவத்திலும் , சில கேள்விப்பட்ட விஷயங்களிருந்தும் எழுதியவை , ஏதாவது தப்பா இருந்த சொல்லுங்க மாத்திடலாம் .
இப்படிக்கு
சமூக கிறுக்கன் .
ஜவலாக்கடி கிரி கிரி சைதாப்பேட்டை வடகறி...
ReplyDeleteஇன்னா கருத்துப்பா...
சோக்கா சொல்லிக்கினபா.. நம்ம மெட்றாஸ் மெய்யாலுமே செம தூள் தான். இங்கே இருக்கிறவன் அல்லாருமே குஜாலா தான் இருக்காங்க... ஆல் தி பெஸ்ட் மாமே!!!👍
ReplyDeleteSuper
ReplyDeleteSupper supper
ReplyDeleteSupper supper
ReplyDeleteSupper supper
ReplyDeleteSemma semma...
ReplyDelete