Wednesday 15 June 2016

பெற்றோரே பெற்றோரே கட்டுமர பெற்றோரே

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது நமக்கு நல்ல தெரிஞ்ச விஷயம் , இது மக்களுக்கு மட்டும் இல்ல இந்த அரசாங்கத்துக்கும் தான்.

2004 கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு அப்புறம் தான் ,அரசாங்கத்துக்கும், பெற்றோருக்கும் சூடு வைத்தது  போல் இருந்தது , அந்த மாதிரி பள்ளிகளுக்கு நடவடிக்கை எடுத்து வந்தது அரசாங்கம்.

2012ல் தாம்பரத்தில்  ஜியோன் பள்ளி வாகனத்தில் இருந்த ஓட்டையால் கீழே விழுந்து , விபத்துல ஒரு 6 வயசு சின்ன பொண்ணு இறந்து போச்சி , அதை மையமாக கொண்டு strawberryன்னு ஒரு படம் கூட வந்தாச்சி , அந்த சம்பவம் நடந்த பிறகு தான், வருஷா வருஷம் பள்ளி வாகனத்தை  RTO சோதனை பண்ண ஆரம்பிச்சாங்க ,பள்ளி  வாகனத்துக்கு மஞ்சள் நிறம் அடிக்கணும் , வேகத்தடை கருவி பொருத்தனம் ,தீயணைப்பு சாதனங்கள்  இருக்கணும் ,மேலும் சில சட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்துச்சி , இது பள்ளி வாகனகளுக்கு மட்டும் இல்ல , கல்லுரி வாகனளுக்கும் பொருந்தும் ,ஆனால் இது எந்த அளவுக்கு நடைமுறையில் உள்ளது ? ஆம் உள்ளது ...
 பள்ளி திறக்கும் ஒரு சில நாட்களுக்கு முன்பு செய்திகளில் ,RTO பள்ளி வாகனங்களை  சோதனை செய்தது , தகுதியற்ற பள்ளி வாகனளுக்கு அங்கீகாரம் ரத்துன்னு செய்திகளில் சொல்லுவாங்க.
ஆனால் அந்த மாதிரி மஞ்சள் நிறம் கொண்ட பள்ளி வாகனங்கள் , எந்த அளவுக்கு சாலையில்  பார்க்கிறோம்? எத்தனை  பள்ளிகள் அரசாங்கம் சொன்னா மாதிரி வாகனங்கள் வச்சி இருக்குன்னு  தெரியுமா?உண்மை நிலவரம் என்ன தெரியுமா ?

ஆம் தெரியும் , அந்த பள்ளிகளுக்கு தெரியும், அந்த வாகனகளை இயக்குகிற travelsநிர்வாகத்துக்கு தெரியும் , ஏன் அதில் பிள்ளைகளை அனுப்பும் மரமண்டை பெற்றோர்க்கு தெரியும் , இதோ அந்த பள்ளி வாகனம் ,




 இவை தான் இன்றைய உண்மையின் முகம் , இதோ இந்த மாதிரி பள்ளி வாகனத்தில் தான் இன்றைய பெற்றோர் அனுப்புகிறார்கள்,

இந்த மகேந்திரா வேன்களிலும் ஆம்னி கார்களிலும்  செல்லும் பசங்களுக்கு எந்த அளவுக்கு பாதுக்காப்பு இருக்கிறது என்பதை இந்த பெற்றோர்கள் யோசிச்சி இருக்காங்களா ? அல்லது இந்த அரசாங்கத்திற்கு  எந்த அளவுக்கு தெரியும் ? ஏன் இந்த வாகனங்கள் சாலையில் செல்லும் போது இதை போக்குவரத்து காவல் கண்களில் படுவதில்லையா?  அல்லது RTO காதுகளில் கேட்பதில்லையா ? ஏன் இந்த வேன்கள் சைலென்ட் modeல்   செல்லுகிறதா ? அல்லது invisible modeல் செல்லுகிறதா ? நேரத்திற்கு பள்ளிக்கு போக வேண்டும்ன்னு  இந்த வகை வாகனங்கள் காலையில் சைரைய்ன் வைக்காத ஆம்புலன்ஸ்களாக தெருக்களில் பறக்கிறது , இதன் வேகத்தையும் பாதுகாப்பையும் அறிவது யாரோ ? மேலும் இந்த வாகனங்களில் டிரைவர் இருக்கையின் அருகேயே மூன்று அல்லது நான்கு மாணவர்கள் உட்கார்ந்து செல்லுகிறார்கள் அவர்களின் பாதுகாப்பினை அறிவது யாரோ ?

இந்த வாகனங்களை பற்றி கேட்டால் , பள்ளிக்கும் அந்த travelsக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லுவாங்க ஆனால் , அந்த பள்ளிகளுக்கு முன்னாடி வரிசயாய் நிற்கும், இதை சென்னையில் பல பிரபல பள்ளிகளின் வளாகத்தின் அருகே பார்க்கலாம், மேலும் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாலும் , நேரம் மாற்றம் செய்தாலும் இந்த வேன் டிரைவர்களுக்கு தெரியும் ஆனா கேட்டால் அந்த பள்ளிகளுக்கும் அந்த வேன்களுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லுவாங்க.

பல பிரபல பள்ளிகளுக்கு பள்ளி வாகனங்களே கிடையாது, அரசாங்கம் கூறுவது   போல் சில பள்ளிகளில் அந்த மஞ்சள் நிற  வாகனங்கள் இருந்தாலும் அவைகள் பெற்றோர்களுக்கு கட்டுபடி ஆகாத கட்டணத்தில் உள்ளதால் பெற்றோர்கள்  தம் பிள்ளைகளின் பாதுகாபின்னை மறந்து இத்தகைய தனியார் வாகனங்களை நாடி செல்லுகிறார்கள், எனவே அரசாங்கம்  மாணவர்களின்  பாதுகாப்பிற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில் கீழே உள்ள வரிகள் தான் பெற்றோர்களுக்கு பொருந்தும்

பெற்றோரே பெற்றோரே  உங்களை  கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாக மிதக்க மாட்டீங்க ,மரமண்டையாய் தான் இருப்பீங்க ..மீண்டும் ஒரு முறை ஜியோன் பள்ளி சம்பவம் போல் நடக்கும் வரை.

இப்படிக்கு 
சமூக கிறுக்கன் 

#samoogakirukkan 


Wednesday 3 February 2016

Thuu... - த்தூ ..

தமிழ் நாட்டுல சமிபகாலத்தில ரெண்டு வார்த்தை பிரபலம் ஒன்று பீப் , இன்னொன்று த்தூ ..
இந்த த்தூ இப்போ கேப்டன் சொன்னதால  பிரபலம் இல்ல , பல காலமா நம்ம நாட்டுல இருப்பது தான்,வேற எதுவும் இல்லைங்க நாம் அன்றாடும் பொது இடத்தில துப்புவது தான்.

ஆமாங்க நம்ம ஊரில் நிறைய துப்புஅறியும் சாம்பு இருக்காங்க .அதாவுது கற்பனை கதாபாத்திரம் detective சாம்பு இல்லைங்க , இவங்க வாயில் கண்டதையும் போட்டு கொதப்பி  எங்க துப்புவதுன்னு தெரியாம சாலையில் துப்பும் துப்புகெட்ட பசங்க இவனுங்க.

அட அரசாங்கம் குட்கா, மாவா, பான்பராக்  மாதிரி பொருட்களை 2013ல் இருந்து தடை செய்யப்பட்டு இருந்தாலும் இன்னும் நிறைய பேர் அதை பயன்படுத்துபவர்கள் இருக்காங்க, அந்த நாசமா போகிற பொருட்டுகளை  அவனுங்க எப்படியாவாது சாப்பிட்டு, உடலை கெடுத்துகிட்டு  போகட்டும் அது அவன் அவன் இஷ்டம், ஏன்னா அது அவன் அவன் தனிப்பட்ட உரிமை, சொன்னாலும் எவனும் கேட்க்கமாட்டங்க ,ஏன்னா புகையிலை உடல்நலத்திற்கு கேடுன்னு அட்டையில் போடுவது அதை தயாரிக்கிற கம்பெனியோட கடமை , அதுல எது போட்டு இருந்தாலும் சரி அதை வாங்கி வாயில் போடுவது நம்ம பசங்களின் உரிமைன்னு  இருக்காங்க .
அப்படி அதை பயன்படுத்தும்  உங்களுக்கு எல்லாம் ஒன்னு சொல்லிக்கிறேன் வாயில் போடுற வரைக்கும் தான் அது உங்க தனிப்பட்ட உரிமை ஆனா அதை ரோட்டுல துப்புவது உங்க உரிமை இல்ல.

துப்பு....
உங்க வீட்டுல துப்பு , ..
நீ ஆட்டோ ஓட்டும் போது உன்னோட ஆட்டோகுள்ள துப்பு ,..
கார் ஓட்டினா உன்னோட கார்ல துப்பிக்கோ ,
என்ன ​​​​​​​ ___________  ரோட்டுல துப்புர? அதுவும் வண்டி ஓட்டும் போதே எதுக்குடா துப்பூரிங்க, சமிபகாலமா இது ரொம்ப அதிகமா இருக்கு,  2 வீலர் ஓட்டுறவங்க அவனுக்கு பின்னாடி உட்க்கார்ந்து இருப்பவங்க, helmet போட்டவங்க கூட அதை துக்கிட்டு வண்டி ஓட்டும் போதே நடுரோட்டிலே துப்புராங்க, பின்னாடி எவன் வரான் எப்படி வரான் பார்கிறதே கிடையாது...

முன்னாடியெல்லாம் நடந்து போய்கிட்டு இருக்கும் போது, எப்போ எவன் வண்டியை நடுப்புல விடுவான் பார்த்து போகவேண்டியது இருக்கும் ஆனா இப்போ எவன் எப்போ எப்படி நடுப்புல திடீர்ன்னு துப்புவான் தெரியல,அதை வேற பார்த்து போக வேண்டிருக்கு,துப்பரது துப்புரிங்க கொஞ்சம் ஓரமா துப்பலாம்ல.ஏன்டா பொது இடத்தில துப்புறது தப்பு அதுல என்னடா வியாக்கியானம்?நியாயம் எல்லாம் சொல்லுறேன்னு  கேட்கிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது, அதாவது நம்மக்கு முன்னாடி போகிறவன் துப்புறது நம்ம மேல படவில்லை என்றாலும், அந்த ஒரு அடி ரெண்டு அடி கேப்ல அவன் பின்னாடி வரும் போது,அப்படா  நல்லவேளை நம்ம மேல படலை என்றும், ச்சீங்கிற ஒரு அறுவிறுப்பும் தோனுதுல, அதுக்கு தான் அப்படி சொன்னேன்.

இதுல ரொம்ப கொடுமையான விஷயம் என்னன்னா, இந்த பான்பராக் போட்டு துப்புபவனை விட வெறும் எச்சியை துபுரவங்க நிறைய பேரு இருக்காங்க,ஏன் சும்மான்னா  வெறும் எச்சியை ரோட்ல துப்புராங்கன்னு தெரியல, இவனுங்க வீட்டுக்குள்ளையும்  இப்படி தான் சும்மான்னா துப்பிப்பானுகளா தெரியல, அவங்களுக்கு எதாவது சைக்கலாஜிக்கல் பிரச்சனை இருக்கான்னு தெரியல,ஏன் இப்படி சொல்லுறேனா கடந்த டிசம்பர்-2015 மழைல மெயின் ரோட்ல வெள்ளமா தண்ணி ஓடுது அதுல நடந்து போகும் போது துப்புரானுங்க இவனுங்க !!,  ஏன்டா நீ துப்புரியே அந்த துப்புர  எச்சி அளவுக்காவுது உன்னோட தலையில அறிவு இருக்கா? உனக்கு பின்னாடி நிறைய பேரு நடந்து வந்துகிட்டு இருக்காங்களே ,அப்படி மழை தண்ணில துப்பினா பல வியாதி வருமே, அப்படின்னு எதுவுமே தோணலையா?

கண்ட இடத்தில துப்பிவிட்டு  பின்னாடி  வெறும் காலில் மாலை போட்டு வரும் சாமியார்க்கு, பூசாரிகளுக்கும்  பாதபூஜை செய்வது ஏன்? இதற்க்கு பெயர் தான் செய்த பாவத்தை கழுவதா ?

மச்சி எங்கயோ எவனோ இவன் மேல துப்பி இருப்பான் போல என்னமா கூவுரான் பார்ன்னு சொல்லுகிற உங்க மைண்ட் வாய்ஸ் கேக்குது, இல்லைங்க யாரும் என்மேல துப்புல,சமிபகாலமா இந்த மாதிரி துப்புறது ரோட்ல நிறைய நடக்குது அது பார்க்கும் போது நம்மக்கு  கடுப்பா இருக்கு, இதை நம்ம எல்லோரும் தினசரி பார்க்கிறது தான், ஏன் அதை இங்கு பதிவு செய்யகூடாதுன்னு தோணிச்சி முடிஞ்சா இதை ஷேர் பண்ணுங்க.இதை படிச்சிட்டு கொஞ்சம் துப்புரது குறைத்தால் சந்தோசம் தான்.ஏன்னா நம்ம மக்கள் அபராதம் எல்லாம் போட்டா  கூட கேட்க மாட்டாங்க, அவங்களா தோனுச்சினா தான் மாறுவாங்க, அப்படி இந்த பதிவு மாற்றம் கொண்டு வந்தா சந்தோஷம் தான்.

இப்படிக்கு
சமூககிறுக்கன்