பொதுவா வாராவாரம் ஒரு படத்தை பார்த்துட்டு விமர்சனம் எழுதிடுவேன், ஆனால் இந்த வாரம் பல படங்கள் வந்தாலும் , சில பல வேலைகளால் எந்த படமும் பார்க்க முடியல , சரி எதையாவுது எழுதுவோம்ன்னு இந்த சமூக கிறுக்கனுக்கு வந்து எழுதலாம்ன்னு தோணுச்சி.
வருஷா வருஷம் ஒரு புது வருஷம் வருது , எல்லோரும் சொல்லுவது போல இந்த வருஷமும் காலண்டர் தேதி தவிர நாம ஒன்னும் உருப்படியா கிழிக்கல, ஆனா இந்த டிசம்பர் 31ம் தேதி நடக்கும் விஷயங்கள் ஒரு பயணமாக எழுதலாம்ன்னு ஒரு ஐடியா(மூக்கு புடைப்பா இருந்தா யோசிக்க தோணும்) .
நாம வீட்டுல இருந்தா டிவி தவிர ஒன்னும் பார்க்க மாட்டோம் , சரி டிவி போட்டா , இந்திய இந்த வருஷம் , உலகம் இந்த வருஷம் , இந்த வருஷம் சிறந்த படங்கள் , புது வருஷம் ராசிபலன்கள்ன்னு, தனியார் சேனல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்னைக்கு வரைக்கும் எத்தனை சேனல் வந்தாலும் மாறாத இந்த நிகழ்ச்சிகள் , மக்கள் பார்க்குறாங்களா இல்லையான்னு கவலைப்படாமல் போட்டுக்கிட்டு இருக்காங்க.
அட இந்த டிவி தொல்லை தாங்கல ஆப் பண்ணிட்டு , நாம வழக்கம் போல நம்ம கையில இருக்குற மொபைல் நோண்டுவோம் பார்த்தா, ஜியோகாரன் தினமும் 1gb free data கொடுத்தாலும், நம்ம பசங்க 4gbக்கு ஒரே forward wishesகளும் , imagesகளையும் இருக்குற எல்லா குரூப்களிலும் அனுப்பி நம்மை torture பண்ணுவாங்க, இது எதுவும் சம்மந்தம் இல்லாம இந்த மொபைல் providersகாரங்க இன்னைக்கு SMS அனுப்பினா free கிடையாது sms சார்ஜ் பண்ணுவோம்ன்னு ஒரு மெசேஜ் அனுப்புவாங்க, யாரும் இல்லாத கடைக்கு யாருக்கு டா டீ ஆத்துறீங்கன்னு கேட்க தோணும்
ச்சே இந்த பிரச்சன்னை எல்லாம் வேண்டாம் டா, வெளியே ஒரு நட நடந்து என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் பார்த்தா , அப்போ தான் ஒருத்தன் வந்து, அப்புறம் மச்சி நியூ இயர் பிளான் என்னன்னு கேட்பான், டிசம்பர் 29ம் தேதியிலிருந்து இந்த கேள்வி கேக்க ஆரம்பிச்சிடுவானுக, அதுவும் 31ம் தேதி சரக்கு அடிச்சி மட்டை ஆகுபவனலிருந்து, தயிர் சோறு சாப்பிட்டு மட்டை ஆகுபவன் வரை இந்த கேள்வி கேட்ப்பானுங்க , எதுக்கு யார்கிட்ட கேக்கணும் ஒரு விவஸ்தை இல்லாமல் பாரபட்சம் இல்லாமல் கேட்ப்பாங்க.
அப்படியே ரோட்ல போனா , புதுசு புதுசா one way , no way இருக்கும் , மேலும் தீடிர்ன்னு முளைத்து இருக்கும் barricadeகளுடன் எவன் எந்த வண்டில போதையில வந்து மோதி என்ன ஏழரைய கூட்டுவனோன்னு யோசினையில பாதுகாப்பில் இருக்கும் போலீஸ்காரர்கள்,முகம் தெரியாதவனுக்கு அவசரத்துக்கு உதவாதவன் கூட அன்னிக்கு இரவு முழுவதும் ,முகம் தெரியாதவனுக்கு ஹாப்பி நியூ இயர்ன்னு சொல்லிட்டு போவானுங்க.
இவனுக தொல்லை தாங்கல திரும்பவும் வீட்டுக்கு போகலாம் பார்த்தா, போற வழில நம்ம தெரு பசங்க ஸ்டார் கட்டிக்கிட்டு, பாட்டு போட்டுக்கிட்டு , கையில கேக் ரெடியா வச்சிக்கிட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்ன்னு , ஊ ஊ ன்னு ஊளை விட்டுகிட்டு ,ஏதோ 15ஆக்ஸ்ட்1947 ராத்திரி சுதந்திரத்துக்கு காத்துகிட்டு இருக்கிறா மாதிரி இருப்பாங்க.
இதை எல்லாம் தாண்டி நம்ம வீட்டு வாசலுக்கு போனா!, நம்ம வீட்டுல இருக்கும் பெண்கள் அஞ்சறை பெட்டியோடு வெளியே நிப்பாங்க, என்னடான்னு எதாவுது சமைக்க போறாங்களான்னு பார்த்தா, அது சமையல் அஞ்சறை பெட்டி இல்ல, கோலம் போடுறதுக்கு கலர் வச்சி இருக்கும் பெட்டி, இது பரவாயில்லை சில பேரு வீட்டுல கொட்டாங்குச்சில கொட்டி வச்சியிருப்பாங்க,மார்கழில கோலம் போடுவது நம்ம கலாச்சாரம் , ஆனா இந்த நியூ இயர்க்கு ஸ்பெஷல் ஆகா கலர் போட்டு கோலம் போடுவது என்பது சமீப வருஷங்களில் எழுதப்படாத புது கலாச்சாரம் என்று ஆகிடுச்சு .
ஒரு பக்கம் பசங்களோட ஆட்டம் பாட்டம் , மறுப்பக்கம் பெண்கள் தெருக்களில் கோலப்போட்டி, இப்படின்னு உங்க கொண்டாட்டத்தின் நடுவே எங்க தூக்கத்தை ஏன்டா கலைச்சிங்கன்னு கேட்க்காமல் கேட்க்கும் நாய்களின் கூட்டம் மறுப்பக்கம்.
இப்படி இந்த பயணத்தை முடிச்சிட்டு வீட்டுக்கு போனா, 12மணிக்கு சன் மியூசிக் ல சகலகலா வல்லவன் கமல் ஹாப்பி நியூ இயர் சொல்லுவதை கேட்டுட்டு , கண்ணை மூட்டிட்டு தூங்குவது தான் மிச்சம் .காலையில முழிச்சி வாசலை பார்த்தா Happy New Year ன்னு போட்டு ஒரு கோலம் இருக்கும்.
சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டு இல்லை என்று சொல்லும் கட்சிக்கு தெரியாத ? ,நம் வீட்டு வாசலில் கோலம் வடிவில் Happy New Year என்கிற ஆங்கிலம் நுழைந்துவிட்டது என்று .
குறிப்பு : இந்த பதிவு எந்த கலாச்சாரத்திற்கும் எதிரானது அல்ல , இவன் என்ன ஒழுங்கா, இவன் எந்த ஆட்டம் போடுவது இல்லையா என்று கேட்க்கும் உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு தெரியும் .
இப்படிக்கு
சமூக கிறுக்கன்
வருஷா வருஷம் ஒரு புது வருஷம் வருது , எல்லோரும் சொல்லுவது போல இந்த வருஷமும் காலண்டர் தேதி தவிர நாம ஒன்னும் உருப்படியா கிழிக்கல, ஆனா இந்த டிசம்பர் 31ம் தேதி நடக்கும் விஷயங்கள் ஒரு பயணமாக எழுதலாம்ன்னு ஒரு ஐடியா(மூக்கு புடைப்பா இருந்தா யோசிக்க தோணும்) .
நாம வீட்டுல இருந்தா டிவி தவிர ஒன்னும் பார்க்க மாட்டோம் , சரி டிவி போட்டா , இந்திய இந்த வருஷம் , உலகம் இந்த வருஷம் , இந்த வருஷம் சிறந்த படங்கள் , புது வருஷம் ராசிபலன்கள்ன்னு, தனியார் சேனல் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்னைக்கு வரைக்கும் எத்தனை சேனல் வந்தாலும் மாறாத இந்த நிகழ்ச்சிகள் , மக்கள் பார்க்குறாங்களா இல்லையான்னு கவலைப்படாமல் போட்டுக்கிட்டு இருக்காங்க.
அட இந்த டிவி தொல்லை தாங்கல ஆப் பண்ணிட்டு , நாம வழக்கம் போல நம்ம கையில இருக்குற மொபைல் நோண்டுவோம் பார்த்தா, ஜியோகாரன் தினமும் 1gb free data கொடுத்தாலும், நம்ம பசங்க 4gbக்கு ஒரே forward wishesகளும் , imagesகளையும் இருக்குற எல்லா குரூப்களிலும் அனுப்பி நம்மை torture பண்ணுவாங்க, இது எதுவும் சம்மந்தம் இல்லாம இந்த மொபைல் providersகாரங்க இன்னைக்கு SMS அனுப்பினா free கிடையாது sms சார்ஜ் பண்ணுவோம்ன்னு ஒரு மெசேஜ் அனுப்புவாங்க, யாரும் இல்லாத கடைக்கு யாருக்கு டா டீ ஆத்துறீங்கன்னு கேட்க தோணும்
ச்சே இந்த பிரச்சன்னை எல்லாம் வேண்டாம் டா, வெளியே ஒரு நட நடந்து என்ன நடக்குதுன்னு பார்க்கலாம் பார்த்தா , அப்போ தான் ஒருத்தன் வந்து, அப்புறம் மச்சி நியூ இயர் பிளான் என்னன்னு கேட்பான், டிசம்பர் 29ம் தேதியிலிருந்து இந்த கேள்வி கேக்க ஆரம்பிச்சிடுவானுக, அதுவும் 31ம் தேதி சரக்கு அடிச்சி மட்டை ஆகுபவனலிருந்து, தயிர் சோறு சாப்பிட்டு மட்டை ஆகுபவன் வரை இந்த கேள்வி கேட்ப்பானுங்க , எதுக்கு யார்கிட்ட கேக்கணும் ஒரு விவஸ்தை இல்லாமல் பாரபட்சம் இல்லாமல் கேட்ப்பாங்க.
அப்படியே ரோட்ல போனா , புதுசு புதுசா one way , no way இருக்கும் , மேலும் தீடிர்ன்னு முளைத்து இருக்கும் barricadeகளுடன் எவன் எந்த வண்டில போதையில வந்து மோதி என்ன ஏழரைய கூட்டுவனோன்னு யோசினையில பாதுகாப்பில் இருக்கும் போலீஸ்காரர்கள்,முகம் தெரியாதவனுக்கு அவசரத்துக்கு உதவாதவன் கூட அன்னிக்கு இரவு முழுவதும் ,முகம் தெரியாதவனுக்கு ஹாப்பி நியூ இயர்ன்னு சொல்லிட்டு போவானுங்க.
இவனுக தொல்லை தாங்கல திரும்பவும் வீட்டுக்கு போகலாம் பார்த்தா, போற வழில நம்ம தெரு பசங்க ஸ்டார் கட்டிக்கிட்டு, பாட்டு போட்டுக்கிட்டு , கையில கேக் ரெடியா வச்சிக்கிட்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்ன்னு , ஊ ஊ ன்னு ஊளை விட்டுகிட்டு ,ஏதோ 15ஆக்ஸ்ட்1947 ராத்திரி சுதந்திரத்துக்கு காத்துகிட்டு இருக்கிறா மாதிரி இருப்பாங்க.
இதை எல்லாம் தாண்டி நம்ம வீட்டு வாசலுக்கு போனா!, நம்ம வீட்டுல இருக்கும் பெண்கள் அஞ்சறை பெட்டியோடு வெளியே நிப்பாங்க, என்னடான்னு எதாவுது சமைக்க போறாங்களான்னு பார்த்தா, அது சமையல் அஞ்சறை பெட்டி இல்ல, கோலம் போடுறதுக்கு கலர் வச்சி இருக்கும் பெட்டி, இது பரவாயில்லை சில பேரு வீட்டுல கொட்டாங்குச்சில கொட்டி வச்சியிருப்பாங்க,மார்கழில கோலம் போடுவது நம்ம கலாச்சாரம் , ஆனா இந்த நியூ இயர்க்கு ஸ்பெஷல் ஆகா கலர் போட்டு கோலம் போடுவது என்பது சமீப வருஷங்களில் எழுதப்படாத புது கலாச்சாரம் என்று ஆகிடுச்சு .
ஒரு பக்கம் பசங்களோட ஆட்டம் பாட்டம் , மறுப்பக்கம் பெண்கள் தெருக்களில் கோலப்போட்டி, இப்படின்னு உங்க கொண்டாட்டத்தின் நடுவே எங்க தூக்கத்தை ஏன்டா கலைச்சிங்கன்னு கேட்க்காமல் கேட்க்கும் நாய்களின் கூட்டம் மறுப்பக்கம்.
இப்படி இந்த பயணத்தை முடிச்சிட்டு வீட்டுக்கு போனா, 12மணிக்கு சன் மியூசிக் ல சகலகலா வல்லவன் கமல் ஹாப்பி நியூ இயர் சொல்லுவதை கேட்டுட்டு , கண்ணை மூட்டிட்டு தூங்குவது தான் மிச்சம் .காலையில முழிச்சி வாசலை பார்த்தா Happy New Year ன்னு போட்டு ஒரு கோலம் இருக்கும்.
சித்திரை ஒன்று தமிழ் புத்தாண்டு இல்லை என்று சொல்லும் கட்சிக்கு தெரியாத ? ,நம் வீட்டு வாசலில் கோலம் வடிவில் Happy New Year என்கிற ஆங்கிலம் நுழைந்துவிட்டது என்று .
குறிப்பு : இந்த பதிவு எந்த கலாச்சாரத்திற்கும் எதிரானது அல்ல , இவன் என்ன ஒழுங்கா, இவன் எந்த ஆட்டம் போடுவது இல்லையா என்று கேட்க்கும் உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு தெரியும் .
இப்படிக்கு
சமூக கிறுக்கன்
:D
ReplyDelete:D
ReplyDeleteHappy new year, ippadii ku vun review vaa padikameyee like podum sangathu thondan):-*@#%&-+\©®™℅[]∆~`|•√π÷׶∆
ReplyDeleteஅழகான அருமையான பதிவு. மேலும் நிறைய எழுதலாம் ஷியாம்.. வாழ்த்துக்கள்.
ReplyDeleteNice one!! Mugam theriyathavanukku avasarathuku uthavathanka mugam theriyathavanku New Year wishes solvanga....nice pinch and punch bro ;)-- KP
ReplyDelete